திருமலையில் கார்த்திகை மாத தீபோற்சவத்தை முன்னிட்டு கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது.
திருமலையில் வரும் வியாழக்கிழமை (நவ.22ம் தேதி) கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு கார்த்திகை தீபோற்சவம் நடைபெற உள்ளது.
அன்று ஏழுமலையான் கோயில் முழுவதும் நெய் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கம். இவ்விழாவையொட்டி, வழக்கமாக பௌர்ணமி நாளில் மாலை நேரத்தில் நடைபெறும் கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. இதை பக்தர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.