கும்பகோணம் அடுத்துள்ள நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில், புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி தினமான 17-10-2018 அன்று திருக்கோயில் வளாகத்தில் காலை 11மணி முதல் மதியம் 2 மணிவரை சிறப்பு பூஜையாக ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது.
இவ்விழாவில், அருள்மிகு செண்பகவல்ல்லி தாயார் [உற்சவர்] ஸ்ரீசரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதனை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் கண்டு வழிபாடுகள் செய்தார்கள்.