இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 14 - செப்டம்பர் 20) பலன்களை தினமணி ஜோதிடர்..
இந்த வாரம் உங்க ராசிக்கு எப்படி இருக்கும்?

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (செப்டம்பர் 14 - செப்டம்பர் 20) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தெய்வானுகூலம் சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றகரமான சூழ்நிலை தென்படும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். சிறிய முயற்சிகள் பெரிய வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைபெறுவார்கள். சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சரளமான நிலைமை உண்டாகும். கூட்டுத்தொழிலில் ஒற்றுமை ஓங்கும். விவசாயிகளுக்கு  கால்நடைகளால் லாபம் அதிகரிக்கும். பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.

அரசியல்வாதிகள் அனைவராலும் பாராட்டப்படுவார்கள். புதிய பதவிகளில் அமர்ந்து சேவை செய்வீர்கள். கலைத்துறையினர் நிறைய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மனதில் ஏதோ பறிகொடுத்தது போன்ற உணர்வு இருக்கும். பெண்மணிகள் கணவரின் ஆதரவையும் பெற்றோர்களின் அரவணைப்பையும் பெறுவார்கள். 

மாணவமணிகள் கல்வியில் முன்னேற மேற்கொள்ளும் பயிற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

பரிகாரம்: வேங்கட நாதனை வணங்கிவர, சிரமங்கள் குறையும். 

அனுகூலமான தினங்கள்: 14,17. 

சந்திராஷ்டமம்: 15,16.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். உடலில் அசதி தோன்றும். தன்னம்பிக்கை குறையும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் படிப்படியாக நல்ல நிகழ்ச்சிகள் நடைபெறும். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளிலிருந்து தள்ளி இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின்ஆதரவு சுமாராகவே இருக்கும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். ஆனாலும் கவனத்துடன் இருக்கவும். விவசாயிகள் விளைச்சல் அதிகமாகி லாபம் பெறுவர். அதேநேரம் பழைய கடன்களை அடைத்தபிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்க வேண்டாம்.  மேலிடத்தில் நல்ல பெயர் எடுக்கவும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகளின் எண்ணிக்கை குறையும். பணவரவு சற்று குறையும். பெண்மணிகளுக்கு பெண்கள் மூலமாகவே உதவிகள் கிடைக்கும். தோழிகளிடம் மிகுந்த அன்பு செலுத்துவீர்கள். மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 14,15. 

சந்திராஷ்டமம்:17,18,19.

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் முன்னேற்றம்  உண்டாகும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். மங்களகரமான நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். மேலும் எதையோ இழந்துவிட்டது போன்ற மனக்கவலைகளுக்கு ஆளாகலாம். புனிதப்பயணங்களை மேற்கொள்வீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வர்த்தகர்களின் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் செய்வீர்கள். யாருடனும் கூட்டு சேராமல் தனித்தே செயல்படுங்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மாணவமணிகள் கடுமையாக முயற்சித்தால் அதற்கேற்ற பலனை அடையலாம். 

பரிகாரம்: "நாராயணா' என்று ஜபித்துக்கொண்டே பெருமாள் சந்நிதியைச் சுற்றி வரவும்.  அனுகூலமான தினங்கள்: 15,16. சந்திராஷ்டமம்: 20.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். சில தடைகள்ஏற்பட வாய்ப்பிருப்பதால் நிதானம் தேவை. மற்றபடி விலகிப்போன உறவினர்கள் வருவார்கள். மனோபலத்தை அதிகரிப்பதற்கு அமைதியை கடைப்பிடிக்கவும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக பணிகளைச் செய்து வரவும். பொருளாதார வசதியில் எந்தக் குறையும் இருக்காது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான காலமாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவுடன் கடையை சீரமைக்க முயற்சி செய்வீர்கள். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் குறையும். மகசூலும் எதிர்பார்த்த அளவு கிடைக்காது. 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் அரிய சாதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக் கொடுப்பதில் சில தடைகள் ஏற்படும். ஆனாலும் முழுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் படிப்பில் போதிய கவனம் செலுத்தவும். 

பரிகாரம்: சிவபெருமானையும் சூரியபகவானையும்  வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும்  ஏற்படாது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம்  சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலக வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடந்தேறிவிடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இதனால் புதிய சந்தைகளை நாடிச் செல்லலாம். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும்.பொருளாதாரத்தில் முன்னேற்றகரமான நிலைமை தென்படும். 

அரசியல்வாதிகளுக்கு சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். சொந்தக் கட்சிக்காரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். கலைத்துறையினருக்கு பட வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும்.  பெண்மணிகள் குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவார்கள். மாணவமணிகள் சராசரிக்கும் சற்று குறைவான மதிப்பெண்களைப் பெறுவார்கள்.  

பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வர, நல்ல பலன்கள் கூடும். 

அனுகூலமான தினங்கள்: 15,17. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

செலவுகள் அதிகமாகி வரவுகள் குறையும். அதனால் ஒவ்வொரு செயலையும் ஒரு முறைக்கு இரு முறை நன்கு ஆலோசித்து செய்யவும். குடும்பத்தினரிடம் மனம் விட்டு கலந்தாலோசித்து எந்தவொரு முடிவையும் எடுக்கவும். உங்கள் மதிப்பு, மரியாதைகள் அதிகரிக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். மேலதிகாரிகளுக்கு உங்கள் மீது இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தைப் பெருக்க நினைக்கலாம். புதியவர்களை நம்பிக் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து மேலும் லாபத்தை அள்ளலாம்.

அரசியல்வாதிகள் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு பாராட்டும் விருதுகளும் கிடைக்கும். பெண்மணிகள் குடும்பத்தினருடன் ஒற்றுமையாக இருக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படும். ஆகவே, கடினமாக உழைக்கவும். 

பரிகாரம்: துர்க்கையையும் பைரவரையும்  வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். எதிர்பாராத ஸ்பெகுலேஷன் வகையில் லாபம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிரிகளின் பலம் குறையும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். உற்றார் உறவினர்கள் அனுகூலமாக இருக்க மாட்டார்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு படிப்படியாக குறையத் தொடங்கும். பணவரவு கூடும். விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமுகமான நிலைமை தென்படும். அரசாங்கக் கெடுபிடிகளுக்கும் ஆளாக நேரிடலாம். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். புதிய கழனிகளை வாங்கி வருங்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளை தலைமையிடம் கூறிவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். பணவரவு நன்றாக இருக்கும். பெண்மணிகளின் உடல்நலம் பாதிக்கப்படும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள். எனவே கவனத்துடன் இருக்கவும். 

பரிகாரம்: பைரவரை வணங்கி வர, நலன்கள் உண்டாகும். 

அனுகூலமான தினங்கள்: 14,18. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சிறு குழப்பங்கள் தோன்றி மறையும் காலகட்டமிது. உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்னைகள் உண்டாகலாம். எடுத்த காரியங்களில் இடையூறுகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் விட்டுப் போயிருந்த சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளையும் சக ஊழியர்களையும் அனுசரித்துச் செல்லவும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி புகழ் அடைவீர்கள். வியாபாரிகள் எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவர். புதிய சந்தைகளில் பொருள்களை விற்பர். கூட்டாளிகளிடம் பார்த்துப் பழகவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பயிர்களில் புழுபூச்சிகள் பாதிப்பு இருந்தால் உடனே கவனிக்கவும். 

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். தொண்டர்களால் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். மாணவமணிகள் தேவையில்லாத வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வார்கள். கவனத்துடன் இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 15,20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். பணவரவுக்குக் குறைவு இருக்காது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடித் தரும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பு மரியாதை மேம்படும். உற்றார் உறவினர்களின் அன்பு மழையில் நனைவீர்கள். தன்னம்பிக்கை மேம்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு படிப்படியாக வேலைப்பளு அதிகரிக்கும்.  மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் அரசாங்க விஷயங்களில் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவார்கள். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும். 

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சில பிரச்னைகள் தோன்றும். கட்சித் தலைமையுடன் மோதல் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு இது குதூகலமான காலகட்டமாகும். உங்களின் புதிய திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு குடும்ப ஒற்றுமை மேலோங்கும். மாணவமணிகள் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானங்களைச் செய்து ஆற்றலைக் கூட்டிக்கொள்ளவும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 18, 13. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய) 

உங்களின் அனைத்து வேலைகளும் கடின முயற்சிகளுக்குப்பிறகே விரும்பிய இலக்கினை அடையும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். வழக்குகள் சாதகமாக அமையும். மதிப்பு, மரியாதை கூடும். குழப்பங்களைத் தவிர்த்து தனிமையை நாடுவீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். பணவரவு இரட்டிப்பாகும். வியாபாரிகளுக்கு அலைச்சல், டென்ஷன் குறையும். வாடிக்கையாளர்கள் தேடி வருவர். கூட்டுத்தொழில் நன்றாக நடக்கும். விவசாயிகளின் உடல்உழைப்பிற்கு இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சீரடையும். 

அரசியல்வாதிகள் சிரமமின்றி வெற்றிகளைக் காண்பர். தொண்டர்கள் மற்றும் கட்சி மேலிடத்தின்ஆதரவு பலமாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். மாணவமணிகள் அதிகம் உழைத்து மதிப்பெண்களைப் பெறுவர். எல்லா விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவர்.

பரிகாரம்: " விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்' உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 16, 19. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். சில முயற்சிகள் வெற்றி பெறுவதில் தடங்கல்கள் ஏற்படும். பொருளாதார வளத்தில் குறைவு இருந்தாலும் முக்கியத் தேவைகள் பூர்த்தியாகும்.  

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்திற்குள் செய்து முடிப்பீர்கள். இதனால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உங்கள் பிரதிநிதிகள்  விற்பனையை பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வாய்க்கால் வரப்பு விஷயங்களில் முடிவு உங்களுக்குச் சாதகமாகவே அமையும். 

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் உஷாராக இருக்கவும். கட்சி மேலிடத்திடம் கவனமாக நடந்து கொள்ளவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வர். பணவரவும் நன்றாக இருக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உடலும் மனமும் பலப்படும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 19,  20. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

வீண் அலைச்சல்கள் உண்டாகும். உங்கள் மதிப்பு மரியாதைக்கு எந்த பங்கமும் வராது. குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். ஆன்மிகத்தில் நாட்டம் இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். மேலதிகாரிகள், உங்களிடம் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.  நண்பர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். வாய்க்கால் வரப்பு விஷயங்களில் முடிவு சாதகமாக இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் பொறுமையாக நடந்து கொள்ளவும். தேவையற்ற அணுகுமுறையால் தொண்டர்களிடம் அவமதிப்பு உண்டாகலாம். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி ஓங்கும். குழந்தைகளால் சந்தோஷம் கிடைக்கும். மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். விளையாடும் நேரத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: சனீஸ்வரரையும் மகாலட்சுமியையும் வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 16, 20. 

சந்திராஷ்டமம்: 14.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com