சத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் 19-ம் ஆண்டு ஏகலக்ஷ மூலமந்திர ஜப யாகம் நடைபெறுகிறது.
ஆர்ய வைஸ்ய சமூகத்தாரின் குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு 19-ம் ஆண்டு ஏகலக்ஷ மூலமந்திர ஜப யாகம் நடத்தப்பட உள்ளது. புரட்டாசி மாதம் 13 மற்றும் 14-ம் நாள் 29.09.18 சனி மற்றும் 30.09.18 ஞாயிற்றுக்கிழமையும் ரோகிணி நக்ஷத்திரமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஏகலக்ஷ மூலமந்திர ஜபம், தசாம்ச ஹோமம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற திருவுள்ளம் கூட்டிவைத்துள்ளது.
இந்த மூல மந்திர ஜபத்தில் பக்தகோடிகள் அனைவரும் திரளாக கலந்துகொண்டு அம்பிகையின் திருவருளுக்கு பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறோம்.