பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் நரசிம்மர் கோயிலில் புரட்டாசி திருவோண ஏகதின தீர்த்தவாரி உற்சவ விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி, காலை 7 மணிக்கு தெப்பக்குளத்திற்கு பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து, தெப்பக்குளத்திற்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, ஸா்வ தோஷநிவா்த்திக்காக புருஷ சூத்த ஹோமம், கலசத்தில் வருண ஜெபம், கும்பாபிஷேகம் நடைபெற்றது. பிறகு, பெருமாள் தெப்பக்குளத்தில் உற்சவ மூா்த்தியுடன் இறங்கி தீர்த்தவாரி கண்டருளினாா்.
தொடர்ந்து, பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் கோயிலையும், தெப்பக்குளத்தையும் சப்பரத்தில் வலம்வந்தாா். பிறகு தீபாராதனை நடைபெற்றது. அதேபோல, மாலையிலும் சுவாமி கோயிலையும், தெப்பக்குளத்தையும் சிறப்பு அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினர், ஸ்ரீஸாம்ராஜ்ய லட்சுமி நரசிம்ம பீடத்தினா், நரசிம்மசுவாமி கைங்கா்ய சபையினா் செய்திருந்தனர்.