குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கடந்த செப்.13-ல் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் தாயார்களுடன் வேங்கடாசலபதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 23-ம் தேதி புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.