குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. 
குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கடந்த செப்.13-ல் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் தாயார்களுடன் வேங்கடாசலபதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 23-ம் தேதி புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com