கோயில்களில் சனி மகா பிரதோஷம்

ஆம்பூர் சமயவல்லித் தாயார் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, உற்சவர் பிரகார உலா நடைபெற்றது.
கோயில்களில் சனி மகா பிரதோஷம்

ஆம்பூர் சமயவல்லித் தாயார் சமேத சுயம்பு நாகநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதையடுத்து, உற்சவர் பிரகார உலா நடைபெற்றது.
 ஆம்பூர் அருகே வடசேரி மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தையொட்டி, மூலவருக்கு திருமுருகன் பூண்டி கேதுபகவான் வழிபட்ட மாதவிவனேஸ்வரர் திருக்காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அலங்கார மண்டபத்தில் வாராணசி காசி விஸ்வநாதர் தரிசனக் காட்சி அமைக்கப்பட்டிருந்தது. அலங்கார மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி விஸ்வநாதருக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் செய்தனர்.
 ராணிப்பேட்டையில்...
 ராணிப்பேட்டை, செப். 23: லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலையில் உள்ள காஞ்சனேஸ்வரர் கோயில், வாலாஜாபேட்டை காசி விஸ்வநாதர் கோயில், திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவதலங்களில் சனிப் பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com