செய்திகள்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் கருட சேவை

தினமணி

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி உற்சவத்தை முன்னிட்டு நடைபெற்ற உதய கருட சேவையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

108 திவ்ய தேசங்களில் 17-வது திவ்ய தேசமான சவுரிராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் கோயிலில் ஏற்படும் தோஷங்கள் நீங்க புரட்டாசி மாதத்தில் பௌர்ணமி நட்சத்திரத்தில் பவித்திர உற்சவம் நடைபெறும். 

இதை முன்னிட்டு கோயிலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தாயார்களுடன் பட்டுமாலை அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் உலா வந்தார். 

அதன் பின்னர் துர்த்தவாரி நிகழ்ச்சியும் விமரிசையாக நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் பட்டுமாலைகளை பெருமாளுக்கு சாத்தி நேர்த்திக்கடனைச் செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT