காளஹஸ்தி கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அனைத்து சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
ஆந்திரத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் 19ஆம் தேதி வியாச பௌர்ணமியை முன்னிட்டு அன்று காலையில், அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றில் திரிசூல ஸ்நானம் நடைபெற உள்ளது. பஞ்சமூர்த்திகள் வலமும் நடைபெற உள்ளதால் அன்று முழுவதும் கோயிலில் நடைபெறும் அனைத்து கால அபிஷேகங்களையும், ஆர்ஜித சேவைகளையும் கோயில் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அவை அனைத்தும் கோயில் சார்பில் தனிமையில் நடத்தப்படும். ராகு-கேது பரிகார பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.