கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலை முருகன் கோயிலில் பிப்ரவரி 19-ம் தேதி மாலை 6.30 மணிக்கு பெளர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது.
முருகனின் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலின் கிழக்கு வாசலில் உள்ள வல்லப கணபதி சன்னதியிலிருந்து புறப்படும் பெளர்ணமி கிரிவலத்திற்கு மருத்துவர் அன்பு தலைமை வகித்து தொடங்கி வைக்கிறார்.
அதை தொடர்ந்து தேவார திருப்புகழ் பாராயண முழக்கத்துடன் இமயவன் வழிகாட்டுதலுடன் கிரிவலம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிரிவல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.