செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

DIN


திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில், கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் விரிசையாக நடைபெற்றது.
இக்கோயிலில் வரும் 24ஆம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 
இதை முன்னிட்டு, கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் சடங்கான கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள் நடத்தப்பட்டன. 
அதன் பின் கோயில் முழுவதும் சாத்தப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாயில்களில் புதிய திரைச்சீலைகள் அணிவிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT