வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீட முப்பெரும் விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா வெள்ளிக்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது.
இப்பீடத்தின் நிறுவனரான முரளிதர சுவாமிகளின் 58-ஆவது ஜெயந்தி விழா, 16 தெய்வீக திருக்கல்யாணம், 1,000 தவில் மற்றும் நாதஸ்வரக் கலைஞர்களின் நாத சங்கமம் என முப்பெரும் விழா வரும் மார்ச் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்குவதற்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.