திருமலையில் இன்று அங்கப்பிரதட்சணம் மற்றும் பல ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் புதன்கிழமை பார்வேட்டை உற்சவம், கோதா பரிணய உற்சவம் (ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்) நடைபெறுகிறது.
அதனால் இன்று ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அங்கப்பிரதட்சணம், தோமாலை, அர்ச்சனா, சகஸ்ர தீபாலங்கார சேவை, சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம் உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
எனவே, அங்கப்பிரதட்சணம் செய்வதற்காக, மத்திய விசாரணை அலுவலகத்தில் வழங்கப்படும் டிக்கெட் வழங்கப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.