செய்திகள்

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பிப்.10-ல் மஹா கும்பாபிஷேகம்

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம் அச்சிறுபாக்கத்தில் அருள்மிகு இளங்கிளி நாயகி உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 

பாடல்பெற்ற இத்திருத்தலத்தில் திருப்பணிகள் நிறைவடைந்து வர்ண வேலைகள் செய்யப்பட்டு நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் தை மாதம் 27-ம் தேதி 10.02,2019 ஞாயிற்றுக்கிழமை சுக்ல பஞ்சமி, ரேவதி நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீன லக்னத்தில் மேற்படி ஆலயத்தில் உள்ள அனைத்து பரிவாரங்களுடன் கூடிய அருள்மிகு இளங்கிளி நாயகி உடனுறை ஸ்ரீ ஆட்சீஸ்வரர் மற்றும் அனைத்துப் பரிவார மூர்த்திகளுக்கும் புனராவர்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. 

பக்தகோடி பெருமக்கள் அனைவரும் தவறாமல், மறவாமல் கலந்துகொண்டு யாகசாலை பூஜை வேள்விகைகளைக் கண்டுகளித்து இன்புற்று எல்லாம் வல்ல இறைவனின் தனிப்பெருங்கருணைக்குப் பாத்திரர் ஆகி பதினாறு செல்வங்களும் பாங்குடன் பெற்று பேரானந்தப் பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம். அனைவரும் வருக ஆட்சீஸ்வரர் சுவாமி அருளைப்பெருக. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்த மருத்துவம் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்த மருத்துவா் கைது

மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம்

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

SCROLL FOR NEXT