திருமலையில் பௌர்ணமி கருடசேவை

ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை காலை பௌர்ணமியையொட்டி கருடசேவை நடைபெற்றது.
திருமலை மாட வீதியில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி.
திருமலை மாட வீதியில் கருட வாகனத்தில் வலம் வந்த மலையப்ப சுவாமி.


ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை காலை பௌர்ணமியையொட்டி கருடசேவை நடைபெற்றது.
மாதந்தோறும் பௌர்ணமி இரவு வேளைகளில் தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் திருமலைக்கு வந்து நேரடியாக கருட சேவையைக் காண முடியாத பக்தர்கள் பௌர்ணமி இரவு நேரத்தில் கருட சேவையைக் கண்டு தரிசித்துச் செல்கின்றனர். அதன்படி திங்கள்கிழமை மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை தை மாத பௌர்ணமி கருட சேவை நடைபெற்றது. மலையப்ப சுவாமி கருடன் மீது அமர்ந்தபடி மாட வீதியில் வலம் வந்ததைக் காண பக்தர்கள் திரண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com