செய்திகள்

மருத்துவ ஜோதிடம் - பகுதி (1)

தினமணி


ஜோதிடம் என்பது அறிவியல் ஆராய்ச்சியில்  உட்பட்ட மருத்துவம் என்று கூறலாம். மருத்துவ ஜோதிடம் என்பது இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும்  தெரிந்திருக்கும். ஆனாலும் இந்த கட்டுரையின் வாயிலாக முதலில் மருத்துவ ஜோதிடம் பற்றிய சிறு விளக்கம், லக்கின மற்றும் ராசியின் முக்கிய உடற் பாகங்கள்,  கிரகங்கள் வாயிலான நோய்களின் பாதிப்புகள், இந்த கலியுகத்தில் நோய்க்கான சிறு தீர்வு என்று பார்ப்போம்.

ஒரு மனிதனுக்கு நோய் என்பது இருவகையாகப் பிரிக்கலாம். ஒரு வகை மனிதனுக்கு எப்பொழுதும் நோய் இருந்துகொண்டு இருக்கும் அவை ஜாதகரின் விதி, ஆனால்  இந்தவகை தாக்கத்தை இயற்கை மருத்துவப்படி சிறிது குறைத்துக் கொள்ளலாம். மற்றொருவகை ஒருசில காலகட்டங்களில் நோய்கள் வந்துவிட்டுச் செல்லும். அந்த நோயின்  தீவிரத்தை ஜாதகரின் 6, 8 அதிபதிகள் மற்றும் நட்சத்திர சாரம் பெற்ற அதிபதிகள் தீர்மானிப்பார்கள். சில நாட்களிலே மருந்து உண்டு குணப்படுத்தக்கூடிய நோய்கள் ஆறாம்  வீட்டையும் மற்றும் ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் மருந்து உட்கொள்ளும் நோய்கள் எட்டாம் வீட்டையும், படுக்கையில் படுத்தே கிடப்பார்கள் என்பதற்கு பனிரெண்டு  பாவத்தையும் குறிக்கும். அந்த காலங்களில் நாம் கொஞ்சம் கவனம் மற்றும் முன்னோர் கோட்பாடுகளின்படி நோயின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

ஆனால் அதற்குரிய காரக கிரகத்தையும் அதன் பாவத்தையும் பார்த்து பலன் சொல்ல வேண்டும். இவற்றை பற்றிய விவரம் திரேக்காணம் D3 சக்கரத்தின் வாயிலாகக்  கண்டறியலாம். திரேக்காணம் மூலம் எந்தவகை மருந்து மாத்திரை மூலம் சரிசெய்து கொள்ளும் அல்லது அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.  திரேக்காணம் பற்றிய விவரங்கள் பின்னர் வரும் கட்டுரையில் விவரிக்கிறேன். ஒவ்வொரு கிரகமும் அஷ்டவர்க்கத்தில் குறைந்தது 4 பரல்கள் முக்கியமாக லக்கினாதிபதி  அதிக பரல்கள் பெற்று பலம் பெற்றிருக்கவேண்டும். பரல்கள் குறித்து இருந்தால் அந்த கிரகம் பலம் குன்றியதாகக் கருதப்படுகிறது. ஜாதகருக்கு நோயினை ஆரோக்கியம், திட  ஆயுள் பலத்தோடு இருக்கச் சூரியன், சந்திரன், சனி, லக்கினாதிபதி முக்கியப்பங்கு வகுக்கின்றன. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.

விதி மதி கதி வாயிலாக நோயின் தாக்கம்

(1) கடவுளால் ஒருவர் ஜனனம் எடுக்கும்பொழுது அன்றைய கிரகங்களின் நிலைகளை வைத்தே அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அப்பொழுது ஏற்படும்  உடலின் கூறுகளை நிர்ணயித்து உயிரூட்டி பெருமை பிரம்மாவை சேரும் இதை விதி (லக்கினம்) அல்லது கடவுள் கொடுப்பினை என்று சொல்லலாம். அதன்படி நோயின்  அளவு மாறுபடும். 

(2) மதி என்றால் சந்திரன், அவரை அடிப்படையாகக் கொண்டு தசா புத்தியை தான் "மதி" என்பது நம் மனம் மாறி கொண்டே இருப்பது போல் தசா புத்தி (சந்திரன்) வழியாக   மாறி மாறி வருவதைக் குறிக்கிறது. 

(3) வானமண்டலத்தில் உள்ள கிரகங்களின் அன்றைய கோள்களின் நிலையையும் அவை தசா புக்தியோடு கலந்து ஏற்படுத்தும் மாற்றத்தையும் குறிப்பது கோட்சரம் அதைத்  தான் கதி என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஜாதகருக்கு நோயின் பாதிப்பு முக்கியமாகப் பாதகாதிபதி/ ரோகாதிபதி/ அஷ்டமாதிபதி/மாரகதிபதிகள் தசா–புத்தி-அந்தரங்க  காலங்களில் மற்றும் கோட்சர கிரக காலங்களில் லக்கின பாவத்தோடு சம்பந்தப்படும் காலங்களில் அதற்குரிய கிரகங்கள் வலுப்பெற்று நோயின் அழுத்தம் அதிகப்படுத்தும்.

முன்னூறு காலங்களில் ஜாதகரின் கட்டங்கள் வாயிலாகப் பார்த்து; வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம்(நீர்) கண்டறிந்து மருத்துவம் அளிக்கப்படும். நாடி  முறையில் உடல் நோய் வலுவினை கண்டறிவார்கள்.  

‘கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி 
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’

இந்த சித்தர் பாடலில் மனிதனுடைய உடல் என்பது எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, 'இருப்பிடம்' மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால்  இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அண்டத்தில் உள்ள பிண்டத்தின் சூட்சமமாகக் கிரகங்கள் வாயிலாக எலும்பு மண்டலம், நரம்பு  மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம் (தோலை மூடி), மூச்சு மண்டலம், ஜீரணம் மண்டலம், இனப்பெருக்க மண்டலம், சிறுநீரகம் மண்டலம் என்று உடம்பை  மண்டலங்களாகப் பிரித்துள்ளார்கள் நம் பாரம்பரிய மருத்துவத்தில். இந்த மண்டலங்கள் ஒவ்வொரு இணைப்பும் தமது பணியைச் சரிவர இயக்கினால் நாம் உயிரோடு  வாழமுடியும் என்பது சித்தர் கூற்று. 

சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ஜோதிடம் அறிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திற்காக சட்டப்படி காப்புரிமை (Patent)  நம் நாட்டில் பெறவில்லை. அதனால் தான் நம் நாட்டில் விளையும், பாரம்பரிய மருத்துவத்தில் நாம் பயன்படுத்தும் மஞ்சள், வேம்பு வெளிநாட்டு நிறுவனம் ஒன்று  காப்புரிமை பெற்றுள்ளது. அதனால் தான் நாம் உடனடியாக நிவாரணம் பெற சட்டப்படி சான்று பெற்ற அலோபதி மருத்துவத்தைத் தேடிச் செல்கிறோம். தற்பொழுது சில  இடங்களில் ஜோதிடம் பார்த்து மருந்துகள் கொடுத்துக் கொண்டுவருகிறார்கள். 

காலபுருஷ தத்துவப்படி கீழே குறிப்பிட்ட 12 ராசி லக்கின காரர்களின் பாவங்களின் உறுப்புகளைப் பார்ப்போம்.

மருத்துவத்தில் சூரியனின் பங்கு 
 
சூரியன் என்பது எல்லா கிரகத்திலும் முக்கிய தலை என்று கூறலாம். இந்த பிரபஞ்ச சக்தியில் நம்முடைய ஆத்ம பலத்திற்கு இவருடைய ஒளிதான் முக்கிய பங்கு   தேவைப்படுகிறது. மனிதனுக்குத் தேவையான உடல் பலத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்க ஆத்ம காரகனாகிய சூரியனால் தான் முடியும். சூரியன் வலுத்து  இருந்தால் கட்டமைப்பு உள்ள உடலமைப்பு இருக்கும். சூரியன் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் தான் வீட்டையும் நாட்டையும் ஆளமுடியும். சூரியன் வலுகுன்றி, நீச்சம் மற்றும்  6,8 அதிபதிகள் தொடர்பு மற்றும் சேர்க்கைகள் ஏற்பட்டால் சூரியனால் ஏற்படும் நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும். 

சூரியன் ஏற்படும் நோய்கள்

ஜாதகருக்கு உடலில் சூரியனின் பலம் இருப்பவருக்குத் தேக ஆரோக்கியம் அதிகமாக இருக்கும் என்பது ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் சூரியன் பலம் இல்லாதவர்களுக்கு   மூளை பாதிப்பு, தலைச்சுற்றல், ஒற்றைத் தலைவலி, வழுக்கையும், வலது கண் பார்வை குறைபாடு, உயிர்ச்சத்து டி குறைபாடு, எலும்பு மண்டலங்களில் தாக்கம், தசை நார்  பிரச்னை, கல்லீரல் பாதிப்பு, சோர்வான உடலைத் தருவது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், காய்ச்சல், எலும்பு புற்று நோய்கள் (பாவிகளோடு சூரியன்  சேரும்பொழுது), பித்தம் சம்பந்தமான நோய்கள், வலிப்பு, தாமிர கால்சியம் குறைபாடு என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

உயிர்ச்சத்து டி (Vitamin D) தாமிர குறிப்பிட்டால்

வேதியல் ரீதியாகப் பார்த்தால் நம் உடலில் உள்ள அனைத்து மண்டலங்களையும் செயல்பட சூரிய சக்தியான வைட்டமின் டி மற்றும் தாமிரம் (Cu) சத்துக்கள் தேவைப்படுகிறது. நம் உறுப்புகளைச் செயல்படுத்த, கொழுப்புக்களின் அளவை குறைக்க, ரத்தணுக்கள் அளவை  அதிகப்படுத்த, உயிரணுக்கள் உற்பத்திக்கு, தசை நார்கள் செயல்பாடுகள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு, எலும்பை வலுப்படுத்த, உடல் பருமனைக் குறைக்க, ரத்த மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், முடி கொட்டாமல் இருக்க என்கிற பலவகை  காரணிகளாகச் சொல்லிக்கொண்டு போகலாம். இன்றும் நம் உலக நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்னை 70% மக்களுக்கு உள்ளது. இவற்றால் உயிர்ச்சத்து குறைந்து  உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

சூரியனின் பலம் பெற சிறு தீர்வு

வைட்டமின் டி சத்து என்பது இலவசமாக கிடைக்கக் கூடிய சூரிய பகவானின் ஒளிக்கதிரிலிருந்து கிடைக்கக் கூடியது. அதனால் தான் நம் முன்னோர்கள் சூரிய ஒளிக்கதிர்  உடம்பில் படும் மாதிரி பச்சிளம் குழந்தையைக் காட்டுவார்கள். தினமும் சூரியனின் நமஸ்கரிக்க வேண்டும், காலை வேளையில் அல்லது குறைந்த சூரிய வெளிச்சம் உடலில்  குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது உடம்பில் சூரியஒளி படும்படி நடக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட (AC) அறையில் இருபதை குறைத்துக்கொள்ள வேண்டும். வீட்டுக்குள்ளேயே அதிக நேரம் தொடர்ந்து இருக்கக்கூடாது. கொஞ்ச நேரம் வெளியில் வந்து வெளிக்காற்றினை சுவாசிக்க வேண்டும். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை முடிந்த  வரை தவிர்த்துக் கொள்ளவும். 

நல்லெண்ணெய் (வெளிப்புறத்திற்கும் & உட்கொள்ளவும்), விளக்கெண்ணெய் (வெளிப்புறத்திற்கும் & உட்கொள்ளவும்), வேப்பெண்ணெய் (வெளிப்புறத்திற்கு) என்று மூன்று  எண்ணெய்களையும் வைத்திருக்க வேண்டும். இந்த மூன்றும் வீட்டிலிருந்தால் துர்சக்தி மற்றும் நோய்கள் நம்மை அண்டாது என்பது அணித்தனமான உண்மை. 

அடுத்தது முதுகு எலும்பு பாதிப்பு நீங்க செக்கிலாட்டிய நல்லெண்ணெய் உடம்பில் சிறிது நேரம் ஊறவைத்து வெந்நீர் குளியல் செய்யவேண்டும், அன்றே சூடான சாதத்தில்  பிரண்டை துவையல், மிளகு ரசம் என்று வாரம் ஒருமுறை சாப்பிட வேண்டும். இவற்றை எங்கள் மருத்துவர் பெரியவா சீடருக்குச் சொல்லி வெற்றியும் கண்டார்.  

எதிர்ப்புச் சக்தி கொண்ட சூரியன் பலம் கொண்ட உணவுகள் - கோதுமை, பால், ஆளி விதை, காளான், மீன், காய்கறிகள், கீரைகள், கடல் நண்டு, பூசனி மற்றும் சூரிய காந்தி  விதைகள், வெள்ளை பீன்ஸ், பருப்பு கொட்டை வகைகள் (முந்திரி & பாதம்), பிரண்டை உட்கொள்ள வேண்டும்.

செப்பு பாத்திரங்களில் உணவு சமைக்க மற்றும் நீர் அருந்த  உபயோகிக்க வேண்டும். தாமிரத்தால் நீர் அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது. 

இன்னும் மற்ற கிரகங்களை மருத்துவ ஜோதிடத்தோடு அறிவியல் ரீதியாக மற்றொரு பகுதியில் கூறுகிறேன்.

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT