டைரக்டர் கே.பி குடுத்த கடமையை நன்கு முடித்த திருப்தி.   

"நெற்றிக்கண்" படத்தின் முதல்  பிரிண்ட்டை பார்க்கிறோம்.
டைரக்டர் கே.பி குடுத்த கடமையை நன்கு முடித்த திருப்தி.   

"நெற்றிக்கண்" படத்தின் முதல்  பிரிண்ட்டை பார்க்கிறோம்.  கதைக் கோர்வை - வசனம் - பாடல்கள் - இசை - நடிப்பு - ஒளிப்பதிவு - எடிட்டிங் - கலை - ஒப்பனை  அத்தனை கலைஞர்களைடைய  உழைப்பும் படத்தில் அபாரமாக  தெரிகிறது. பிறந்த  குழந்தை அழகாக இருப்பதைக் கண்ட  நிலையில் நான்  இருக்கிறேன். டைரக்டர் கே.பி அவர்கள் பாராட்டுகிறார்கள். அவர் குடுத்த கடமையை நன்கு முடித்த திருப்தி.   

இரவு சத்யா 'மூவிஸின் ராணுவ  வீரன்'படத்திற்காக திருநீர்மலையில் பல லட்சம் செலவு செய்து செயற்கையாக ஒரு திருவிழாவை நடத்துகிறோம். அக்கோயில் தோன்றிய காலத்தில் இருந்து அப்படி ஒரு அலங்காரம் செய்ததே இல்லையாம். 30  மோட்டார் சைக்கிள்களில் சிரஞ்சீவியின் ஆட்கள் வந்து கலாட்டா   செய்கிறார்கள்.ரஜினி  சண்டைபோடுகிறார்.என் கண்ணான ஒளிப்பதிவாளர் பாபுவுக்கு மகிழ்ச்சி. மலைக்கெல்லாம்  லைட்  போட்டு அக்காட்சிக்கு உயிர்  கொடுக்கிறார்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ் )

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com