சென்னை கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் மார்க்கத்தில் முதியோர், பெண்கள், நோயாளிகள் என ஆயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பயண நேரம் ஆகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் கழிவறை அமைக்கப்படவில்லை. சர்க்கரை நோய்ப் பாதிப்பு போன்ற உடல் உபாதைகள், குளிர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் இ-டாய்லெட் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன்,
சைதாப்பேட்டை மேற்கு.