சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ளூர் ரயில்கள் (ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம்) நிற்கும் இடத்தில் கட்டணக் கழிவறை உள்ளது. இங்கு சிறுநீர் கழிக்க ரூ 2 கட்டணம் வசூலிக்கப்படும் என்று போர்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், ரூ.5 வசூலிக்கப்படுகிறது. இது குறித்துக் கேட்கும் பயணிகளை, குண்டர்களைக் கொண்டு மிரட்டுகின்றனர். மேலும் பயணிகள் ரயில் நிலைய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் பலனில்லை. ஆகவே உரிய விசாரணை நடத்தி நிர்ணயித்துள்ள கட்டணத்தை மட்டும் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.கனகராஜ், அம்பத்தூர்.