சென்னை மண்ணடியில் மூர் தெரு, அங்கப்பன் நாயக்கன் தெருவில் சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இச்சாலைகளை சீரமைக்க வேண்டும்.
- எம்.முகம்மது தல்ஹா, மண்ணடி.