மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதில் மாநகராட்சி சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.