திருவள்ளூர், பட்டாபிராம், ஆவடி பகுதிகளில் இருந்து கடற்கரை ரயில் நிலையம் வழியாக வேளச்சேரி வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முண்டககன்னியம்மன் கோயில், கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் ஆகிய இடங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்கு வசதியாக உள்ளது. ஆனால், பெயர் பலகையில் ஊரின் பெயர் மூன்று எழுத்தில் உள்ளது. உதாரணமாக எம்ஏஎஸ்- சென்ட்ரல், எம்.எஸ்.பி-கடற்கரை என இருக்கிறது. இது சென்னைக்குப் புதிதாக வரும் பயணிகளுக்கு குழப்பமாக உள்ளது. எனவே, ஊரின் பெயரை பலகையில் முழுமையாக வைக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.வெங்கடாஜலபதி,
திருமுல்லைவாயில்.