வண்ணாரப்பேட்டையிலிருந்து லிம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சாலையின் நடுவில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இருபுறமும் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நடைபாதையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கடைகளுக்கு வந்து செல்பவர்கள் நடைபாதையில் நடக்க முடியாமல், சாலையிலேயே போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அச்சத்தோடு சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவியழகன், திருவொற்றியூர்.