திருவொற்றியூர் மேற்குப் பகுதி அண்ணாமலை நகர், பாலகிருஷ்ணா நகர், சரவணா நகர், ராஜாஜி நகர் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் திருவொற்றியூருக்குச் செல்லும் இணைப்புச் சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இதனை, பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் கடக்கிறார்கள். சில நேரங்களில் ரயில் வருவது கூட தெரியாமல் கடப்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த இடத்தில் மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்க சென்னைப் பெருநகர மாநகராட்சியும், ரயில்வே நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கவியழகன், திருவொற்றியூர்.