பகுதி - 882

இந்த உடல் நிலைத்திருக்கும்..
பகுதி - 882

‘இந்த உடல் நிலைத்திருக்கும் என்று நம்பி அழியாமல், பசித்து வந்தவருக்கு உணவளித்திடும் பேற்றைத் தரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் ஆறு வரையிலான எல்லாச் சீர்களிலும் மூன்று குறிலும் ஒரு வல்லொற்றுமாக மூன்று-மூன்று எழுத்துகள் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

      தனனத் தனனத்                     தனதான

அமைவுற் றடையப் பசியுற் றவருக்

         கமுதைப் பகிர்தற்                கிசையாதே

      அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்

         தருள்தப் பிமதத்                 தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்

         சமனெட் டுயிரைக்               கொடுபோகுஞ்

      சரிரத் தினைநிற் குமெனக் கருதித்

         தளர்வுற் றொழியக்               கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்

         தவருக் கிசையப்                 புகல்வோனே

      இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்

         கிரையிட் டிடுவிக்                ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்

         தவமுற் றவருட்                 புகநாடும்

      சடுபத் மமுகக் குகபுக் ககனத்

         தணியிற் குமரப்                 பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com