தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 898

ஹரி கிருஷ்ணன்

 

‘உனது திருவடிகளை நினைக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவாரூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 23 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; ஐந்தாம் சீரில் இரண்டு நெடில், ஒரு குறில் என மூனறெழுத்துகளும்; ஆறாம் சீரில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதன தனன தனதன தனன

      தானான தந்த                       தனதான

 

மகரம துகெட இருகுமி ழடைசி

         வாரார்ச ரங்க                    ளெனநீளும்

      மதர்விழி வலைகொ டுலகினில் மனிதர்

         வாணாள டங்க                  வருவார்தம்

பகர்தரு மொழியில் ம்ருகமத களப

         பாடீர கும்ப                      மிசைவாவிப்

      படிமன துனது பரிபுர சரண

         பாதார விந்த                     நினையாதோ

நகமுக சமுக நிருதரு மடிய

         நானாவி லங்கல்                 பொடியாக

      நதிபதி கதற வொருகணை தெரியு

         நாராய ணன்றன்                 மருகோனே

அகனக கனக சிவதல முழுது

         மாராம பந்தி                     யவைதோறும்

      அரியளி விததி முறைமுறை கருது

         மாரூர மர்ந்த                    பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT