தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 902

ஹரி கிருஷ்ணன்

‘ஞானம் தந்து என்னை ஆதரித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள கந்தனூருக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சிர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என்று நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தந்தனா தத்ததன தந்தனா தத்ததன

            தந்தனா தத்ததன                                        தந்ததான

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு

                  மின்சரா சர்க்குலமும்                          வந்துலாவி

      விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு

                  மிஞ்சநீ விட்டவடி                                 வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி

                  வந்துதா இக்கணமெ                            யென்றுகூற

      மைந்தர்தா விப்புகழ் தந்தைதா யுற்றுருகி

                  வந்துசே யைத்தழுவல்                       சிந்தியாதோ

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு

                  மங்கிபார் வைப்பறையர்                     மங்கிமாள

      அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்

                  அண்டரே றக்கிருபை                           கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்

                  எந்தைபா கத்துறையு                           மந்தமாது

      எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்

                  எந்தைபூ சித்துமகிழ்                             தம்பிரானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT