முடிவான பொருளைப் பெற வேண்டும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
அடிக்கு ஒற்றொழித்து 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும்; இரண்டு ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தந்தந்தன தத்தன தாத்தன தனதான
என்பந்தவி னைத்தொடர் போக்கிவி சையமாகி
இன்பந்தனை யுற்றும காப்ரிய மதுவாகி
அன்புந்திய பொற்கிணி பாற்கட லமுதான
அந்தந்தனி லிச்சைகொ ளாற்பத மருள்வாயே
முன்புந்திநி னைத்துரு வாற்சிறு வடிவாகி
முன்திந்தியெ னப்பர தாத்துட னடமாடித்
தம்பந்தம றத்தவ நோற்பவர் குறைதீரச்
சம்பந்தனெ னத்தமிழ் தேக்கிய பெருமாளே.