தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 822

ஹரி கிருஷ்ணன்

‘உனது திருவருள் துணை நிற்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 26 எழுத்துகளைக் கொண்ட அமைப்பு.  ஒன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு ஆகிய சீர்களின் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, இரண்டு குறில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தத்தன தாத்தன                    தனதானா

சமய பத்திவ்ரு தாத்தனை                 நினையாதே

  சரண பத்மசி வார்ச்சனை                தனைநாடி

அமைய சற்குரு சாத்திர                   மொழிநூலால்

  அருளெ னக்கினி மேற்றுணை           தருவாயே

உமைமு லைத்தரு பாற்கொடு             அருள்கூறி

  உரிய மெய்த்தவ மாக்கிந                லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய                திறலோனே

  சமண ரைக்கழு வேற்றிய               பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குளம் அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு

ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்

ஆலங்குளம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கிராமப்புற கண்டுபிடிப்புகளை மேம்படுத்த புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT