‘அடியேனை நல்வழிப்படுத்தி அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.
எத்தனை நீளமான அமைப்பாக இருந்தபோதிலும் வழக்கமாக நான்கே அடிகளைக் கொண்டனவையாக அமைந்திருக்கும் பிறபாடல்களைப்போல் அல்லாமல் இப்பாடல் எட்டு அடிகளைக் கொண்டது. எதுகையமைப்பிலும் எட்டு எதுகைகள் இருப்பதைக் காணலாம்.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாய் அமைந்திருக்கும் தொங்கல் சீர்களில் மூன்றாவது எழுத்து நெடிலாக அமைந்த நான்கெழுத்துகள் உள்ளன.
தனத்தத் தானன தனதான
தனத்தத் தானன தனதான
சினத்துச் சீறிய வழிகாணச்
சிரித்துப் பேசியு மயல்பூண
கனத்துப் போர்செயு முலைதோணக்
கலைக்குட் பாதியு மறைவாக
மனத்துக் காறுதல் வருமாறு
மலைப்பப் பேணியு மிகவாய
தனத்தைச் சூறைகொள் மடவார்தம்
சதிக்குப் போம்வழி தவிர்வேனோ
தெனத்தத் தாதென எனவேபண்
திருத்தத் தோடளி யிசைபாடும்
புனத்துத் காவல்கொள் குறமாதின்
புணர்ச்சிக் கேயொரு வழிதேடி
இனத்துக் காவல ரறியாமல்
இணக்கித் தோகையை மகிழ்வோயென்
றெனக்குத் தாளிணை யருள்வாய்சூர்
இறக்கப் போர்செய்த பெருமாளே.