பகுதி - 834

கருணை புரிந்தருள வேண்டும்..
பகுதி - 834

‘கருணை புரிந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரணடு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தந்த தனன தந்த தனன

                தந்த தனன                                                                    தனதான

மைந்த ரினிய தந்தை மனைவி

                        மண்டி யலறி                                                       மதிமாய

      வஞ்ச விழிகள் விஞ்சு மறலி

                        வன்கை யதனி                                                   லுறுபாசந்

தந்து வளைய புந்தி யறிவு

                        தங்கை குலைய                                                உயிர்போமுன்

      தம்ப முனது செம்பொ னடிகள்

                        தந்து கருணை                                                     புரிவாயே

மந்தி குதிகொ ளந்தண் வரையில்

                        மங்கை மருவு                                                     மணவாளா

      மண்டு மசுரர் தண்ட முடைய

                        அண்டர் பரவ                                                       மலைவோனே

இந்து நுதலு மந்த முகமு

                        மென்று மினிய                                                  மடவார்தம்

      இன்பம் விளைய அன்பி னணையு

                        மென்று மிளைய                                              பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com