பகுதி - 836

எப்போதும் உன்னை..

‘எப்போதும் உன்னை முத்தமிழால் ஓதவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும் ஒரு குற்றெழுத்துமாக மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தத்ததன தானான தத்ததன தானான 

                தத்ததன தானான                                                    தனதான

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய

                        கட்டுவிடு மோர்கால                                    மளவாவே

                கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு

                        கற்புநெறி தான்மாய                                      வுயர்காலன்

இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி

                        யிட்டவிதி யேயாவி                                      யிழவாமுன்

                எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத

                        இட்டமினி தோடார                                        நினைவாயே

துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்

                        தொக்கில்நெடு மாமார்பு                            தொளையாகத்

                தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால

                        சுத்ததமி ழார்ஞான                                         முருகோனே

மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ

                        மத்தமயில் மீதேறி                                         வருநாளை

                வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ

                        வைத்தபடி மாறாத                                         பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com