‘சாசுவதமான அறிவை அளித்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருத்தணிகைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக நான்கெழுத்துகளும்; மூன்றும் ஆறுமாக உள்ள தொங்கல் சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு நெடிலுமாக அமைந்துள்ளன. தொங்கல் சீரில் நெடிலெழுத்தின் அமைப்பு மாறி வரலாம்.
தனத்த தத்ததனத் தனதானா
நினைத்த தெத்தனையிற் றவராமல்
நிலைத்த புத்திதனைப் பிரியாமற்
கனத்த தத்துவமுற் றழியாமற்
கதித்த நித்தியசித் தருள்வாயே
மனித்தர் பத்தர்தமக் கெளியொனே
மதித்த முத்தமிழிற் பெரியோனே
செனித்த புத்திரரிற் சிறியோனே
திருத்த ணிப்பதியிற் பெருமாளே.