பகுதி - 914

பரம்பொருளை உணர வேண்டும்..
பகுதி - 914

‘பரம்பொருளை உணர வேண்டும்’ எனக் கோரும் இப்பாடல் ஸ்ரீ புருஷ மங்கை என்னும் தலத்துக்கானது.  தற்காலத்தில் இத்தலம் நாங்குநேரி என்று வழங்கப்படுகிறது.

அடிக்கு ஒற்றொழித்து 31 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும மூன்று குறிலுமாய் நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாய் மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தானதன தந்த தந்தன

      தானதன தந்த தந்தன

      தானதன தந்த தந்தன               தனதான

ஆடல்மத னம்பின் மங்கைய

         ராலவிழி யின்பி றங்கொளி

         யாரமத லம்பு கொங்கையின்     மயலாகி

      ஆதிகுரு வின்ப தங்களை

         நீதியுட னன்பு டன்பணி

         யாமல்மன நைந்து நொந்துட     லழியாதே

வேடரென நின்ற ஐம்புல

         னாலுகர ணங்க ளின்தொழில்

         வேறுபட நின்று ணர்ந்தருள்       பெறுமாறென்

      வேடைகெட வந்து சிந்தனை

         மாயையற வென்று துன்றிய

         வேதமுடி வின்ப ரம்பொரு       ளருள்வாயே

தாடகையு ரங்க டிந்தொளிர்

         மாமுனிம கஞ்சி றந்தொரு

         தாழ்வறந டந்து திண்சிலை       முறியாவொண்

      ஜாநகித னங்க லந்தபின்

         ஊரில்மகு டங்க டந்தொரு

         தாயர்வ சனஞ்சி றந்தவன்        மருகோனே

சேடன்முடி யுங்க லங்கிட

         வாடைமுழு தும்ப ரந்தெழ

         தேவர்கள்ம கிழ்ந்து பொங்கிட    நடமாடுஞ்

      சீர்மயில் மஞ்சு துஞ்சிய

         சோலைவளர் செம்பொ னுந்திய

         ஸ்ரீபுருட மங்கை தங்கிய          பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com