நாள்தோறும் நம்மாழ்வார்

ஒன்பதாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்


பாடல் - 9

பாதம் நாளும் பணியத் தணியும் பிணி,
ஏதம் சாரா, எனக்கேல் இனி என் குறை?
வேத நாவர் விரும்பும் திருக் கண்ணபுரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே.

எம்பெருமானின் திருவடிகளை ஒவ்வொரு நாளும் வணங்கினால் நோய்கள் தீரும், பாவங்கள் நெருங்காது, இனி எனக்கு என்ன குறை? (ஏதுமில்லை.) வேதங்களை ஓதுகின்றோர் விரும்புகின்ற திருக்கண்ணபுரத்திலே எழுந்தருளியிருக்கும் ஆதிப் பெருமான், அவரை அடைந்தவர்களுக்கு அல்லல்கள் ஏதும் இல்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT