நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 7

செ.குளோரியான்

பாடல் 7

கோல மலர்ப் பாவைக்கு அன்பாகிய என் அன்பேயோ,
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்ப
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்,
நீலக் கடல் கடைந்தாய், உன்னைப் பெற்று இனிப் போக்குவனோ?

அழகிய மலரிலே எழுந்தருளியிருப்பவள், திருமகளுக்கு அன்பனே, என்மீது அன்பானவனே, நீல மலையொன்று இரண்டு பிறைகளைக் கவ்விக்கொண்டு நிமிர்ந்ததைப்போல அழகிய வராக அவதாரம் எடுத்தவனே, கொம்புகளுக்கு நடுவே பூமியை ஏந்திய எங்கள் தந்தையே, நீலக் கடலைக் கடைந்தவனே, உன்னை வரமாகப் பெற்றேன், இனி விடுவேனா? (மாட்டேன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT