நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்


பாடல் 4

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து
வல் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்,
மன் அஞ்சப் பாரதத்துப் பாண்டவர்க்காப் படை தொட்டான்,
நல் நெஞ்சே, நம் பெருமான் நமக்கு அருள்தான் செய்வானே.

நல்ல நெஞ்சமே, எம்பெருமான் என்னுடைய நெஞ்சத்துக்குள் தங்கியிருக்கிறான், சிறந்த தமிழ்ப்பாடல்களைப் பாடுகிறான், (என்னைப் பாடவைப்பது அவனே. கொடிய நெஞ்சம் கொண்ட இரணியனின் மார்பைப் பிளந்த வாட்டாற்றான், இந்த உலகமே அஞ்சும்படி பாரததத்துப் பாண்டவர்களுக்காக ஆயுதம் எடுத்தவன், அத்தகைய நம்பெருமான் நமக்கு அருளே புரிவான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT