ஓவியர் மாருதியின் வண்ண அட்டைப்படத்துடன் அழகுற மிளிர்கிறது ஓம்சக்தி தீபாவளிமலர். சரித்திரம் படைத்த சந்திரகிரிக் கோட்டை, வள்ளல் பாண்டித்துரைத் தேவர் உ.வே.சா.வுக்கு எழுதிய கடிதங்கள், ஐந்தவித்தான் ஆற்றலும் அகலிகை கதைகளும், பஞ்ச பூதங்கள் முதல் பஞ்ச இந்திரியங்கள் வரை, பர்மாவும் பழங்காலத் தமிழரும், இரு சிறை வாரணப் போர், பெங்களூரு போக-யோக நந்தீஸ்வரர் கோயில், கரூர் அருகே ஆதிநாத தீர்த்தங்கரர் சிற்பம், நாடகத் தமிழிலும் தடம் பதித்த பாரதியார், இன்றைய இளைஞருக்கான அறிவியல் போன்ற கட்டுரைகள் மலருக்குப் பெருமை சேர்க்கின்றன. கி.ராஜநாராயணன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், விமலாரமணி, ராஜேஷ்குமார், ஆர்னிகா நாசர் உள்ளிட்ட பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகளும், கவிஞர் முத்துலிங்கம், சிற்பி, ஈரோடு தமிழன்பன் போன்ற பல கவிஞர்களின் உணர்ச்சி மிக்க கவிதைகளும் மலரை அலங்கரிக்கின்றன. வள்ளலார், காஞ்சி மகா பெரியவர் வண்ணப் படங்களுடன் பக்தி மணம் வீசும் மலர்.