தைவானில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா!

கடந்த ஏப்ரல் 21ம் தேதி சனிக்கிழமை மாலை தைவானில் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தைவானில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா!


கடந்த ஏப்ரல் 21ம் தேதி சனிக்கிழமை மாலை தைவானில் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தைவானில் சங்கமித்த தைவான் வாழ் தமிழர்களின் சங்கமமாகும். இத்திருவிழாவில் தைவான் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது தைவான் வாழ் இந்தியர்கள், தைவான் மற்றும் வெளிநாட்டவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். தைவான் வாழ் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில் ஜனவரி 2013 ஆம் ஆண்டு தைவான் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.  அன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் பொங்கல் மற்றும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அவ்வண்ணமே, இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவனது கடந்த 21 ஆம் நாள் சனிக்கிழமை அன்று தைவான் தேசிய பல்கலைகழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. 

தைவானின் பல்வேறுபட்ட நகரங்களில் இருந்தும் குறிப்பாக ஷிஞ்சு, தைச்சூங், ஹொஷியாங் மற்றும் தைனன் நகரங்களில் இருந்து பெருபான்மையான தமிழர்கள் வந்து கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினர்களாக இந்தியா தைபே அசோசியேசனின்  முதன்மை இயக்குனர் மேதகு ஸ்ரீதரன் மதுசூதனன், தேசிய தைவான் பல்கலைகழகத்திலிருந்து, மூலக்கூறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பன்னாட்டு பட்டமேற்படிப்பு  துறை இயக்குனர் பேராசிரியர் சுன் வேய் சென், பேராசிரியர் ஷென்-மிங் சென், இரசாயன பொறியியல் மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் துறை மற்றும் இந்திய தைவான்கலாச்சார கூட்டமைப்பின் தலைவர் இராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவில் சங்கத்தின் துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்று உரையாற்ற சிறப்பு விருந்தினர்களால் குத்து விளக்கேற்றி சித்திரை விழா இனிதே தொடங்கிவைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்துச் செய்திகளால் விழா சிறப்புற நடைபெற்றது. இந்தியா தைபே அசோசியேசனின் முதன்மை இயக்குனர்  ஸ்ரீதரன் மதுசூதனன் அவர்கள் சிறப்புரையாற்றும் போது, இந்திய மாணவர் சமுதாயத்தின் பங்களிப்புதனை எடுத்துரைத்து, தைவான் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையேயுள்ள நட்புறவுதனை எடுத்து உரைத்தார். மேலும் சீன மொழியின் எதிர்கால முக்கியத்துவத்தினை விளக்கி வாழ்த்துரை வழங்கினார்.

தைவானில் ஆராய்ச்சி பட்டம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கடந்த ஆண்டு முதல் "இளம் ஆராய்ச்சியாளர்" விருது தைவான் தமிழ்ச்சங்கத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது பணமுடிப்பு, பட்டையம் அனைத்தும் உள்ளடக்கியது. 2018 ஆம் ஆண்டிற்கான இளம் ஆராய்ச்சியாளர் விருதிற்கு

•           திருவளர். நடராஜன் கரிகாலன் (Karikalan Natarajan)
•           செல்வி. பவித்ரா ஸ்ரீராம் (Pavithra Sriram)
•           திருவளர். செல்லக்கண்ணு ராஜ்குமார் (Chellakannu Rajkumar)
•           செல்வி. பிரியதர்ஷினி (Priya Dharsini K)
•           திருவளர். அன்குர் ஆனந்த் (Ankur Anand)
•           திருவளர். முகேஷ் குமார் தாகூர் (Mukesh Kumar Thakur)

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள். விழா மேடையில் இவ்விருதினை Dr. சுன் வெய் சென்( Director NTU),  Dr . சங்கர் ராமன் (துணை தலைவர், தைவான் தமிழ் சங்கம்) மற்றும் திரு. ரிஷிகேஷ் சுவாமிநாதன் ( உதவி இயக்குநர், ITA ) ஆகியோர் வழங்கி மாணவர்களை கௌரவப்படுத்தினர்.

மேலும் கடந்த வருடத்தில் தைவானின் பல்வேறு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர்களை கெளரவ படுத்தும் விதமாக அவர்களுக்கு சங்க நிர்வாகிகள் சங்கர் ராமன், ரமேஷ் பரமசிவம், பிரசன்னன் மற்றும்  பொன்முகுந்தன் சுந்தரபாண்டி ஆகியோர் பதக்கம் அணிவித்து பாராட்டு பத்திரம் வழங்கி சிறப்பு செய்தார்கள்.

தைவான் தமிழ்ச்சங்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் ஆர்வலர்கள்  பிரகாஷ் - சங்கரி பிரியா தம்பதியினருக்கும் மற்றும் தில்லை நாயகம் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக தைவான் தமிழ்ச்சங்கத்தால் நடத்தப்பட்ட கிரிக்கெட் கோப்பை 2018ல் வெற்றிபெற்ற தைபே இந்தியன்ஸ் அணியினருக்கும் இரண்டாம் இடம் வந்த பாக்கிஸ்தான் கிரிக்கெட் கிளப் தைபே அணியினருக்கும் விழா மேடையில் கோப்பை மற்றும் பணமுடிப்பு பரிசாக வழங்கப்பட்டது.

பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், சிறுவர் சிறுமியரின் நடனம் மற்றும் உடையலங்கார காட்சிகள், புதியீடு குழுவினரின் தமிழகத்தின் நிலை பற்றிய நாடகம் மற்றும் தைவான் மகளீரின் ஆடல் பாடல்  என்று கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றது. சிறுவர் சிறுமியருக்கான ஓவிய போட்டி நடத்தப்பட்டு விழா அரங்கின் முகப்பில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. விழாவில் அனைவருக்கும் அறுசுவை இரவு உணவு பரிமாறப்படது. இவ்விழாவில் சுமார் 350 பேர் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள். இவ்விழா தேசிய கீதத்துடன் நிறைவுபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com