தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்த தோனிக்கு வெற்றியைப் பரிசாக அளித்த வாட்சன்! 

எப்படியும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால்...
தன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்த தோனிக்கு வெற்றியைப் பரிசாக அளித்த வாட்சன்! 

கடந்த வருட ஐபிஎல் போட்டியில் ரகளை செய்தார் ஷேன் வாட்சன். 15 ஆட்டங்களில் 555 ரன்கள் எடுத்தார். 2 சதங்களும் 2 அரை சதங்களும் அதில் அடங்கும். 

இந்த வருடம் அப்படியே தலைகீழாகிவிட்டது. நேற்றைய சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு முன்பு, அவர் அதிகபட்சமாக 44 ரன்கள் தான் எடுத்திருந்தார். 5 முறை ஒற்றை இலக்க ரன்களை எடுத்து சென்னை ரசிகர்களைக் கடுப்பேற்றினார். இதனால் கடந்த சில ஆட்டங்களாக வாட்சன் சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்படுவார் எனக் கணிக்கப்பட்டது. ஆனால் நேற்றைய ஆட்டத்திலும் வாட்சன் இடம்பெற்றார். தோனி தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக 6 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 96 ரன்களை விளாசி, அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 

மற்ற அணிகளிடம் இருந்தபோது நேர்ந்ததுபோல, நான் இப்போது மற்ற அணிகளில் ஏதாவதொன்றில் விளையாடியிருந்தால் இந்தளவுக்கு மோசமாக விளையாடியபிறகு சில ஆட்டங்களுக்கு முன்பே நீக்கப்பட்டிருப்பேன். ஆனால் தோனியும் பயிற்சியாளர் ஃபிளமிங்கும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள். எப்படியும் ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்பது அவர்களுக்குத் தெரியும் என்பதால். 

பிஎஸ்எல் போட்டியில் சிறப்பாக விளையாடிய நான் ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை. என் பேட்டிங் திறமை சீராக வெளிப்படவில்லை. இந்த நிலையில் அவர்களிருவரும் என் மீது நம்பிக்கை வைத்ததை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com