ஐபிஎல் வழியாக உலகக் கோப்பை வாய்ப்பைக் குறி வைக்கும் இளம் வீரர்!

மும்பையைச் சேர்ந்த 24 வயது ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்காக 6 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார்...
ஐபிஎல் வழியாக உலகக் கோப்பை வாய்ப்பைக் குறி வைக்கும் இளம் வீரர்!

மும்பையைச் சேர்ந்த 24 வயது ஷ்ரேயஸ் ஐயர் இந்திய அணிக்காக 6 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் 484 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் நான் நன்றாக விளையாடி வருகிறேன். நான் ஐபிஎல் போட்டியிலும் நன்றாக விளையாடினால் என்னை அணியில் சேர்ப்பது குறித்து ஒன்றுக்கு இருமுறை யோசிப்பார்கள். தேர்வுக்குழு உறுப்பினரான ககன் கோடா என்னைச் சமீபத்தில் சந்தித்தார். நான் நன்றாக விளையாடி வருவதாகவும் தொடர்ந்து இதுபோல விளையாடவேண்டும் என்று அறிவுரை கூறினார் என ஷ்ரேயஸ் ஐயர் பேட்டியளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com