உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து

சீனாவில் நடைபெறும் உலக டூர் ஃபைனல்ஸ் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார். இதன்மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்றார். 

முன்னதாக, அரையிறுதி ஆட்டத்தில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை 21-16, 25-23 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் சிந்து. இதன்மூலம் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தொடர்ந்து 2-ஆவது முறையாக முன்னேறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ஒகுஹராவிடம் பி.வி.சிந்து தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com