செய்திகள்

அஸ்வினுக்குக் காயம்: பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை!

எழில்

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடன் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் அஸ்வின் நேற்று பந்துவீசவில்லை. இந்திய அணி பேட்டிங் செய்தபோதும் அஸ்வின் களமிறங்கவில்லை. ஃபீல்டிங்கிலும் அவர் ஈடுபடவில்லை. எனினும் கவலைப்படும்படி பெரிய காயம் ஏற்படவில்லை. முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு அவர் குணமடைந்துவிடுவார் என்று இந்திய அணித் தரப்பு கூறுகிறது.

இதையடுத்து முதல் டெஸ்டில் அஸ்வினும் குல்தீப் யாதவும் சுழற்பந்துவீச்சாளர்களாக இந்திய அணியில் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

SCROLL FOR NEXT