ஏடிபி பைனல்ஸ்: நிஷிகோரியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் பெடரர்

லண்டனில் தொடங்கிய 16-ஆவது ஏடிபி டென்னிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்-ஜப்பானின் நிஷிகோரியிடம் தோல்வியடைந்தார்.
ஏடிபி பைனல்ஸ்: நிஷிகோரியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார் பெடரர்

லண்டனில் தொடங்கிய 16-ஆவது ஏடிபி டென்னிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒரு ஆட்டத்தில் உலகின் மூன்றாம் நிலை வீரர் ரோஜர் பெடரர்-ஜப்பானின் நிஷிகோரியிடம் தோல்வியடைந்தார்.
 உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் ஆண்டு இறுதியில் மோதும் போட்டி ஏடிபி பைனல்ஸ் என அழைக்கப்படுகிறது. லண்டனில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற ஆட்டத்தில் நிஷிகோரியிடம் 6-7, 3-6 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றார் பெடரர்.12-ஆவது கேமின் போது, அதிருப்தி அடைந்த பெடரர் பந்தை கீழே ஆக்ரோஷமாக வீசியதால் நடுவர் எச்சரித்தார்.
 கடந்த 2014-க்கு பின் நிஷிகோரியிடம், பெடரர் அடையும் முதல் தோல்வி இதுவாகும்.
 மற்றொரு ஆட்டத்தில் கெவின் ஆண்டர்சன் 6-3, 7-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com