செய்திகள்

பல நினைவுகளை மீட்டெடுக்கும் நவம்பர் 15: சச்சின் உருக்கம்

எழில்

நவம்பர் 15.

இந்த நாளன்றுதான் பாகிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்டை 16 வயதில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர். இதை முன்வைத்து அவர் ட்விட்டரில் எழுதியதாவது:

ஒவ்வொரு வருடமும் இந்த நாள், இந்தியாவுக்காக அறிமுகமான நாள் பல நினைவுகளை மீட்டெடுக்கிறது. நாட்டுக்காக விளையாடியதும் 24 வருடங்கள் இந்திய அணியில் இடம்பெற்றதும் கெளரவமாகக் கருதுகிறேன் எனக் கூறியுள்ளார். 

முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஒரு இன்னிங்ஸ் மட்டும் விளையாடிய சச்சின் 15 ரன்கள் எடுத்தார்.

மேலும் இதே தினத்தில்தான் அவர் பேட்ஸ்மேனாக ஆடுகளத்திலிருந்து விடைபெற்றார். தனது கடைசி டெஸ்ட் ஆட்டத்தில், இந்த நாளில்தான் 74 ரன்கள் எடுத்து ஒரு பேட்ஸ்மேனாக ரசிகர்களிடமிருந்து விடைபெற்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் ஆட்டம் அடுத்த நாளில் நிறைவுபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்காவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி; உயிர் பிழைத்த ஒரே சிறுமி

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT