ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.
லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் அவர் 7-6, 6-2 என்ற நேர் செட்களில் குரோஷிய வீரர் மரின் சிலிக்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் பெடரர்-வெரேவும், ஜோகோவிச்-கெவின் ஆண்டர்சனும் மோதுகின்றனர்.
பிரான்ஸ்க்கு எதிராக அடுத்தவாரம் நடக்கவுள்ள டேவிஸ் கோப்பை இறுதி ஆட்டத்துக்குதயாராக உள்ளதாக மரின் சிலிக் தெரிவித்தார்.