ஜோர்டானுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கால்பந்து நட்பு ஆட்டத்தில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வியைத் தழுவியது.
வரும் 2019 ஜனவரி மாதம் ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறவுள்ளன.
இதற்கு தயாராகும் வகையில் இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே பலமான சீனாவுடன் நடப்பு ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்தியா டிரா செய்தது.
இதன் தொடர்ச்சியாக அம்மானில் ஜோர்டானுடன் நட்பு ஆட்டம் நடைபெற்றது. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
உலகத் தரவரிசைப் பட்டியலில் 97-ஆவது இடத்தில் இந்தியாலும், 112-ஆவது இடத்தில் ஜோர்டானும் உள்ளன.
கேப்டன் சுனில் சேத்ரி காயத்தால் இப்போட்டியில் இடம்பெறவில்லை.