ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
பிரிஸ்பேனில் நடைபெறவுள்ள ஆட்டத்துக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், ராகுல், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், கிருனால் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பூம்ரா, கலீல் அஹமது, சாஹல் என 12 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் அணியில் நிச்சயம் இடம்பெறுவார். இந்நிலையில் சாஹல், கிருனால் பாண்டியா ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.