யு19 நட்பாட்டம்: இந்தியா தோல்வி

பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 


பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) கால்பந்து போட்டியில் செர்பியாவுக்கு எதிரான நட்பு ஆட்டத்தில் இந்தியா 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 
அடுத்த ஆண்டு யு19 சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பயிற்சிக்காக ஐரோப்பிய சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய யு19 கால்பந்து அணி. அதில் செர்பியாவுக்கு எதிராக 2 நட்பு ஆட்டங்களில் மோதியது.
இந்தியா முதல் ஆட்டத்தில் ஏற்கெனவே 0-2 என்ற கோல் கணக்கில் தோற்றிருந்த நிலையில், தற்போது 2-ஆவது ஆட்டத்திலும் தோற்றுள்ளது. இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்தியா தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது.
எனினும், சிறிது நேரத்திலேயே செர்பியா ஆட்டத்தை தன் வசமாக்கிக் கொண்டது. செர்பிய வீரர் போஜிச் போஜன் தனி வீரராக முயற்சித்து இந்திய கோல் கீப்பர் பிரப்சுகான் கில்லை கடந்து முதல் கோல் அடித்தார். 30-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் ஆக்ஜெனோவிச் மார்கோ மீண்டும் ஒரு கோல் அடிக்க, செர்பியா 2-0 என முன்னிலை பெற்றது.
சிறிது நேரத்திலேயே செர்பியா தனது 3-ஆவது கோலையும் அடித்தது. இந்நிலையில், முதல் இரு முயற்சிகளில் தோல்வி கண்டிருந்த இந்தியா, 3-ஆவது முயற்சியில் தனக்கான ஆறுதல் கோலை அடித்தது. இதனால், முதல் பாதி முடிவில் செர்பியா 3-1 என முன்னிலையில் இருந்தது.
2-ஆவது பாதியில் இரு அணிகளுக்கும் மேற்கொண்டு கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் போக, இறுதியில் செர்பியா வெற்றி பெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com