சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து, கே.ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
சாங்ஷு நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மூன்றாம் நிலை வீராங்கனை பி.வி.சிந்து 21-23, 21-13, 21-18 என்ற ஆட்டக் கணக்கில் போராடி தாய்லாந்தின் புஸானனை வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் கே.ஸ்ரீகாந்த் 21-12, 15-21, 24-22 என்ற ஆட்டக்கணக்கில் தாய்லாந்து வீரர் சுப்பனுயுவை போராடி வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.எனினும் இரட்டையர் கலப்பு பிரிவில் அஸ்வினி-சிக்கி ரெட்டி இணை, சிக்கி ரெட்டி-பிரணவ் இணை, ஆடவர் இரட்டையரில் மனு அட்ரி-சுமித் ரெட்டி இணை தோல்வியுற்றது.